உடல் நலம்

இதயவலி, இதய படபடப்பு நீங்க இதயம் பலம் பெற

கருப்பையில் துடிக்க தொடங்கி இடைவிடாமல் இயங்கும் ஒரு அபூர்வ உறுப்பு இதயம். உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் இரத்தத்தை விநியோகிப்பது இதன் வேலை ஆகும். உடலின் முக்கிய உறுப்பான இதயத்தை பலநோய்கள் ஆட்டிப்படைக்கின்றன. இதயத்தில் எந்த நோய் வந்தாலும் மனிதனின் ஆயுள் விரைவில் குறைந்து போகும். இதயத்திற்கு அருகில் உள்ள தமனி மற்றும் சிரைகளில் அடைப்பு, இதய நாளச்சுருக்கம், இரத்த கொதிப்பு ஆகியவை முக்கிய இதய நோய்களாகும்.

சித்தமருத்துவத்தில் இதய நோய்களை குணப்படுத்தவும், இதயம் பலம் பெற, இதய நோய்கள் வராமலும் தடுக்க பல முறைகள் உள்ளன அவற்றை பற்றி பார்ப்போம்.

இதயம் பலம் பெற

  • கொட்டைக்கரந்தை செடியை பூ விடுவதற்கு முன்னதாகவே பறித்து நிழலில் உலர்த்தி இடித்து பொடிசெய்து வைத்துக்கொண்டு 5 கிராம் அளவு எடுத்து சிறிது கற்கண்டு பொடி கலந்து சாப்பிட்டுவர இதயத்தை பலப்படுத்தும்.
  • உலர்திராட்சை சாப்பிட்டு வர இதயம் பலம் பெறும்.
  • ரோசாப்பூ, பனகற்கண்டு, தேன் ஆகியவற்றை லேகியமாக கலந்து தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர இதயம் பலப்படும்.
  • நெல்லிக்காயை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும்.
  • கரிசலாங்கண்ணி கீரை இதயத்தை பலப்படுத்தும். வாரம் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.
  • உலர்ந்த அத்திப்பழத்தை இடித்து பொடி செய்து 1 தேக்கரண்டி காலை, மாலை பாலில் உட்கொள்ள இதயம் பலம் பெறும்.
  • திராச்சைப்பழம் நரம்புகள், இதயம், கல்லீரல், மூளை ஆகியவற்றை பலப்படுத்தும்.
  • சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும்.
  • சாத்துக்குடிப் பழத்தை தினந்தோறும் ஆகாரத்திற்கு பின்பு சாப்பிட்டு வர இருதயத்திற்கு பலத்தை கொடுக்கும்.
  • தேங்காய்ப்பால் இதயத்தின் இரத்த ஓட்டத்தை சீராக்கி மாரடைப்பை தடுக்கிறது.
  • தினம் ஒரு நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் உடல் புத்துணர்ச்சி பெறும், இதயம் பலம் பெறும்.
  • அன்னாசி, ஆரஞ்சு பழங்களை அவ்வப்போது சாப்பிட வேண்டும். இதில் வைட்டமின்கள் நிறைந்து காணப்படுவதால் இதயத்திற்கு மிகவும் நல்லது.

இதய பலவீனம்

  • தூதுவேளை காயை உலர்த்தித் தயிர், உப்பு ஆகியவற்றில் பதப்படுத்தி எண்ணெயில் வறுத்து உண்டுவரப் இதய பலவீனம் தீரும்.
  • செம்பரத்தை பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி காலை – மாலை குடித்து வந்தால் இதய நோய்கள் குணமாகும். அதாவது இதய பலவீனம் – மார்பு வலி முதலியவை தீரும்.

இதய நடுக்கம், இதயவலி, இதய படபடப்பு

  • திருநீற்றுப் பச்சிலை இலையை முகர்வதால் தலைவலி, இதய நடுக்கம், தூக்கமின்மை ஆகியவை குணமாகும்.
  • சந்தனக்கட்டை 20 கிராம் எடுத்து நன்றாக இடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு 300 மி.லி நீரில் போட்டு காய்ச்சி 150 மிலி வரை கொதிக்கவைத்து வடிகட்டி 3 வேளையாக 50 மி.லி அளவு குடிக்க இதயவலி குணமாக்கும்.
  • இதயத்தில் உண்டாக்கும் வியாதிகளான அதிகத்துடிப்பு, குறைந்த துடிப்பு, இதய வீக்கம், இருதய சுருக்கம், ரணம், கபாடப்பந்தம் முதலியவைகளுக்கு ஒரு வெண் தாமரைப்பூவை கசாயமிட்டு சாப்பிட்டு வந்தால் உடனே குணம் காணலாம். 48 நாட்கள் தொடர்ந்து பருகிவர இருதய வியாதிகள் அனைத்தும் குணமாக்கிவிடும்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + eighteen =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!