மூலிகைகள்
அரசமரம் மருத்துவ பயன்கள்
![அரசமரம் மருத்துவ பயன்கள்](https://www.siddhamaruthuvam.in/wp-content/uploads/2018/07/அரசமரத்தின்-மருத்துவ-பயன்கள்.jpg)
அரசமரம் கூறிய இலைகளையுடைய பெருமரம் கிராமப்புறங்களில் ஏரி, குளங்களுக்கு அருகில் புனித மரமாக வளர்க்க படுகிறது.இதன் கொழுந்து, பட்டை, வேர், விதை ஆகியவை மருத்துவ பயனுடையது.
அரசம்வேர் மேல்விரண மாற்றுமவ் வித்து
வெருவவருஞ் சுக்கில நோய் வீட்டுங் – குரல்வறளுந்
தாகமொழிக் குங்கொழுந்து தாதுதரும் வெப்பக்கற்றும்
வேகமுத்தோ சம்போக்கும் மெய்
அரசமரம் குணம்
அரசம்வேர்பட்டை சரும நோய்களையும், வீக்கம் குறைக்கும் மருந்தாகவும் பயன்படும். கொழுந்து வெப்ப அகற்றியாகவும், தாகம் தணிப்பானாகவும். விதை காமம் பெருக்கியாகவும் பயன்படுகிறது.
அரசமரம் மருத்துவ பயன்கள்
- அரசம் சூரணத்தை பாலில் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர தாது விருத்தியாகும், பெண்களுக்கு கருப்பை பிரச்சனைகள் தீரும்.
- அரசங்கொழுந்தை அரைத்து புண்களுக்கு பற்று போட புண்கள் ஆறும்.
- அரசம்வேர்பட்டை 30கி 300 மிலி நீரில் போட்டு 100மிலி யாக காய்ச்சி அதில் பால் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர வெட்டைச்சூடு, சொறி, நீர் எரிச்சல், சிரங்கு ஆகியவை தீரும்.
- அரசம்பட்டையை நெருப்பில் கருக்கி தூள் செய்து தேங்காய் எண்ணையில் கலந்து சொறி புண்களுக்கு பூச குணமாகும்.
- அரசம்வேர்பட்டை தூள் 2 சிட்டிகை நீரில் ஊற வைத்து வடிகட்டி கொடுக்க விக்கல், தொண்டை கட்டு, குரல்வளை நோய் தீரும்.
- அரசம்விதை தூள் உயிர் அணுக்கள் பெருக்கியாகவும், ஆண் மலட்டை நீக்கும்.
- அரசங்கொழுந்தை அரைத்து தண்ணீரில் கலந்து குடிக்க சுரம், தாகம் ஆகியவை தீரும்.
- உலர்ந்த பழத்தை இடித்து பொடி செய்து 5 கிராம் அளவு வெந்நீரில் போட்டு காலை, மாலை 20 நாட்கள் கொடுக்க சுவாச காசம் தீரும்.