சித்த மருத்துவம்

மனித உடல் இயக்கத்தின் 7 ஆதார சக்தி சக்கரங்களை பற்றி அறிந்துகொள்வோம்.

மனித உடல் இயக்கத்திற்கு 7 ஆதார ஆற்றல் சக்கரங்களை நம் முன்னோர்கள் வகைப்படுத்தி உள்ளனர்.

  • 1. மூலாதாரம்
  • 2. சுவாதிஷ்டானம்
  • 3. மணிபூரகம்
  • 4. அனாகதம்
  • 5. விசுத்தி
  • 6. ஆக்கினை
  • 7. தூரியம்

மூலாதாரம் : முதுகெலும்பு அடியில் ஆசன வாய் அருகே அமைந்துள்ள இந்த சக்கரம் உடலின் சக்தி என்று அழைக்கப்படுகிறது. நான்கு இதழ் தாமரை போன்ற அமைப்பில் சிவப்பு நிறத்தில் உள்ளது. நாம் உயிர் வாழ வேண்டும் என்ற ஆசை இங்குதான் உற்பத்தி ஆகிறது. உயிரின் இயக்கத்துக்கு காரணமாக அமைவதால் இது மூலாதாரம் என்று அழைக்கப்படுகிறது.

சுவாதிஷ்டானம் : இது தொப்புளுக்கு கீழே 6 இதழ்கள் தாமரை போல் ஆரஞ்சு நிறத்தில் உள்ளது. இது பாலில் உணர்வுகளை தூண்டுகிறது. 5 புலன்களை அடக்கி அறிந்துகொள்ள தேவையான சக்தில் இதில் இருந்து தொடங்குகிறது, மற்றவர்களில் உணர்ச்சிகளை அறிந்துகொள்கின்ற சக்தியும் இதில் இருந்து தொடங்குகிறது.

மணிபூரகம் : இது தொப்புள்களுக்கு மேலே 10 இதழ் தாமரை போன்ற அமைப்பில் மஞ்சள் நிறத்தில் அமைந்துள்ளது. உடலின் மையமாக இதனை அழைக்கலாம் ஏனென்றால் உடல் இயங்க சக்தியை உடல் எங்கும் விநியோகிக்கப்படுகிறது. உணர்ச்சிகள் இங்கு தான் உள்ளது. இதனால் தான் பயம் மற்றும் அதிர்ச்சி ஏற்படும் போது இந்த பகுதியில் உள்ள தசைகள் இறுக்கமாக காணப்படும்.

அனாகதம் : இது இதய சக்கரம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. மார்பு மையப்பகுதியில் இதயம் உள்ள பகுதியில் 12 இதழ் தாமரை போன்ற அமைப்பில் பச்சை நிறத்தில் உள்ளது. இது நற்பண்புகளை உடையதாகும். அன்பு, பாசம், இரக்கம், பக்தி, விசுவாசம் ஆகியவற்றின் இருப்பிடமாகும்.

விசுத்தி : இது 16 இதழ் தாமரை போன்று காணப்படும். இது குரல் வளை சக்கரம் என்றும் அழைக்கப்படுகிறது. இது படைப்பாற்றல், கற்பனை திறன் போன்றவற்றை தரக்கூடிய சக்தியாக உள்ளது. அதாவது நம் புலன்களுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை அறிய உதவுகிறது.

ஆக்கினை : 2 புருவங்களுக்கும் மத்தியில் சற்று மேல் கரு நீளத்தில் இரண்டு இதழ் தாமரை போன்று அமைந்திருக்கிறது. பிட்யூட்டரி சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இயங்குவதால் மூளையின் கீழ்ப்பகுதி, கண், மூக்கு, காது, தண்டுவடம் போன்ற உறுப்புகள் இதன் கட்டுப்பாட்டில் இயங்குகிறது.

தூரியம் : இது உச்சந்தலை பகுதில் 1000 இதழ்கள் உடைய தாமரை வடிவத்தில் கருஞ்சிவப்பு நிறத்தில் அமைத்துள்ளது. இதுதான் ஒருவருக்கு ஞானத்தை அளிக்கிறது. பீனியல் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. பிரபஞ்சத்திற்கும் நமக்கும் உள்ளது தொடர்பை உணர்த்துகிறது.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!