மூலிகைகள்

மஞ்சள் காமாலையை போக்கும் கீழாநெல்லியின் மருத்துவ பயன்கள்

இதன் ஆங்கிலப் பெயர் “phyllanthus niruri” என்பதாகும்.

கீழா நெல்லி – கீழ்வாய் நெல்லி – கீழ்க்காய் நெல்லி என்ற பெயர்களில் அழைக்கப் படுகிறது. தமிழகமெங்கும் ஈரமான இடங்களில் – அதுவும் மழைக்காலத்தில் தானே வளரும் குறுஞ்செடி வகை இது. மாற்றடுக்கில் இருபுறமும் சீராய் இலைகள் அமைத்திருக்கும் . இலைக் கொத்தின் அடிப்பாகத்தில் கீழ் நோக்கி காய்கள் இருக்கும். பூக்காமல் காய் காய்க்கும் இயல்பை உடையது.

இதன் சமூலத்தை(வேர், செடி, காய் அனைத்தும்)அரைத்து கொட்டைப்பாக்கு அளவு பசும் பாலில் கலக்கி சாப்பிட மஞ்சள் காமாலை – சோகை – பாண்டு வீக்கம் – வாத – பித்த நோய்கள் குணமாகும் . சிறு நீரகம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குணமடையும்.

ஆடு – மாடுகள் இதனை சாப்பிட்டால் பால் மிகுதியாக சுரக்கும், ஊட்டமாகவும் இருக்கும்.

இதன் இலை 10 கிராம் அளவு எடுத்து அரைத்து வெறும் வியிற்றில் சாப்பிட வேண்டும். மோர் மட்டும் சாப்பிடலாம். உப்பிலாத பத்தியாக இருந்தால் மஞ்சள் காமாலை 10 நாட்களில் குணமாகும். கல்லீரல் வீக்கத்தை குறைக்கும், கல்லீரலை செயல்பட வைக்கும்.

கீழா நெல்லி இலையை உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொண்டு பாலில் ஒரு கரண்டி தூளை கலக்கி சாப்பிட்டு வர சர்க்கரை நோய் குணமாகும்.உடல் இளைக்காமல் காக்கும். சிறுவர்களுக்கு மிகச் சிறந்த ஊட்டச் சத்து, உடல் உறுதி பெரும்,வயிற்றுப் புண்களை ஆற்றும்.

கீழா நெல்லி இலைச் சாறு – பொன்னாங்கன்ணி இலைச்சாறு சம அளவு கலந்து நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி தலைக்கு தேய்த்து குளித்து வர பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

கீழா நெல்லி வேர் – அசோகப் பட்டை – அத்திப்பட்டை மூன்றையும் இடித்து தூள் செய்து சம அளவு எடுத்து வெந்நீரில் கலந்து காலை – மாலை சாப்பிட்டு வர வெள்ளை,வெட்டை, பெரும்பாடு,மாதவிடாய் தாமதமாதல், உதிரச் சிக்கல் முதலியவை தீரும்.

இலையுடன் உப்பு சேர்த்து அரைத்து உடலில் தேய்த்துக் குளிக்க சொறி, சிரங்கு, நமைச்சல் தீரும்.

கீழா நெல்லி இலை, பொன்னாங்கண்ணி இலை, மூக்கிரட்டை இலை மூன்றும் சம அளவு அரைத்து மோரில் கலக்கி சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் – பார்வை மங்குதல் – வெள்ளெழுத்து முதலியவை குணமாகும்.

இலைச்சாறு – பொன்னாங்கண்ணிச்சாறு சம அளவு நல்லெண்ணெய்யில் காய்ச்சி தலைக்கு தேய்த்து குளித்து வந்தாலும் பார்வைக் கோளாறுகள் தீரும்.

ஓரித்ழ் தாமரையும் – கீழா நெல்லியையும் சம அளவு அரைத்து நெல்லிக்காய் அளவு ஒரு மண்டலம் (45 நாட்கள்) சாப்பிட்டு வந்தால் நரை – திரை நீங்கி இளமையான தோற்றத்தைத் தரும்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!