உணவே மருந்து

எலும்பு, மூட்டு பிரச்சனைகளை வரவிடாமல் தடுக்கும் நார்த்த இலை பொடி

நார்த்தங்காய் எலுமிச்சை குடும்பத்தை சேர்ந்தது அதிகளவு மருத்துவ குணங்களை கொண்டது. நார்த்தங்காயை சர்க்கரை நோயாளிகள், இதய நோய் இருப்பவர்கள், இரத்த அழுத்த பிரச்சினைகள் இருப்பவர்கள் நார்த்தங்காயை தவிர்க்கவேண்டும். ஆனால் நார்த்தங்காய் இலை பொடியை அனைவரும் சாப்பிடலாம்.

நார்த்த இலை பொடி செய்முறை

தேவையானவை
  • நார்த்த இலை ( நரம்புகளை நீக்குவது ) – 20
  • கடலை பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
  • உளுந்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – 6
  • நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
  • பெருங்காயம் – சிறிதளவு
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

கடாயில் நல்லெண்ணையை ஊற்றி காய்ந்ததும் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு சேர்த்து வறுக்கவும் பிறகு காய்ந்த மிளகாய், பெருங்காயம் சேர்க்கவும் நன்கு வறுப்பட்டவுடன் நார்த்த இலையை சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும் ஆறிய பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும்.

நார்த்த இலை பொடியின் பயன்கள்

  • செரிமான பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு நார்த்தை இலைப்பொடி சாப்பிட்டால் உடனே குணமாகும்.
  • பித்தம், வாதம் போன்ற உடல் சூட்டினால் ஏற்படும் பிரச்சினைகள் தீரும்.
  • நார்ச்சத்து அதிகளவு இருப்பதால் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு சிறந்தாகும்.
  • மூளையின் செயல்பாட்டை தூண்டிவிடும், அதனால் மூளை புத்துணர்வுடன் செயல்படும்.
  • வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் அனைத்தும் தீரும்.
  • எலும்பு சம்பந்தமான பிரச்சினைகளை வராமல் தடுக்கும்.
  • மூட்டு வலியை குணமாக்கும், மூட்டு வலி வரவிடாமல் தவிர்க்கும்.
  • இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவும்.
  • புற்றுநோய் வரவிடாமல் தடுக்கும்.
  • கால்சியம், மக்னீசியம், அயோடின், இரும்புச்சத்து, சோடியம், நார்சத்துகள் அதிக அளவு உள்ளது.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!