மூலிகைகள்

இதயம், மூளை, நரம்பை பலப்படுத்தும் கொட்டைக்கரந்தை

கொட்டைக்கரந்தை நறுமணம் உடைய இலைகளை கொண்ட மிகச்சிறுசெடி இனம். பந்து போன்ற செந்நிற பூங்கொத்தினை உடையது. தமிழகமெங்கும் வயல்வெளிகளில் நெல் அறுவைடைக்கு பின் வளரும். செடி முழுவதும் மருத்துவ பயனுடையது.

கொட்டைக் கரந்தைதனைக் கூசாம லுண்டவர்க்கு
வெட்டை தணியுமதி மேகம்போந் – துட்டச்
சொறிசிரங்கு வன்கரப்பான் றேன்றா மலப்பை
மறிமலமுந் தானிறங்கு மால்

குணம்

கொட்டைக்கரந்தைக்கு வெள்ளை, ஒழுக்குபிரமேகம், சினைப்பு, கிரந்தி, கரப்பான் இவைகள் நீங்கும். வெளிவராமல் தங்கிய மலத்தை போக்கும் என்க.

பயன்கள்

  • கொட்டைக்கரந்தை செடியை பூ விடுவதற்கு முன்னதாகவே பறித்து நிழலில் உலர்த்தி இடித்து பொடிசெய்து வைத்துக்கொண்டு 5 கிராம் அளவு எடுத்து சிறிது கற்கண்டு பொடி கலந்து சாப்பிட்டுவர வெள்ளை, உள்ரணம், கிராணி, கரப்பான் ஆகியவை தீரும். இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம், மூளை, நரம்பு ஆகியவற்றை பலப்படுத்தும்.
  • கொட்டைக்கரந்தை பொடியுடன் கரிசலாங்கண்ணி பொடி இரண்டிலும் 5 கிராம் அளவு தேன் அல்லது நெய்யில் குழைத்து சாப்பிட இளநரை தீரும். உடல் பலம் பெறும்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + fifteen =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!