மூலிகைகள்

ஆஸ்துமாவை (இரைப்பிருமல்) போக்கும் முசுமுசுக்கை

முசுமுசுக்கை சுணை உடைய இலைகளையும் சிவப்பு நிற பழங்களையும் உடைய பற்றுக் கம்பிகள் உள்ள ஏறுகொடி. தமிழகமெங்கும் வேலிகளில் தானே வளரக்கூடியது. இலை, வேர் மருத்துவ பயனுடையது.

இருமலுட னீளை இரைப்புப் புகைச்சன்
மருவுகின்ற நீர்தோஷ மாறுந் – திருவுடைய
மானே முசுமுசுக்கை மாமூலி யவ்விலையைத்
தானே யருந்துவர்க்குத் தான்

குணம்

இதன் இலை கோழையகற்றும் தன்மை உடையது. இதன் வேர் பசி உண்டாக்குதல், சளி அகற்றுதல், நஞ்சு நீக்குதல் ஆகிய குணங்களுடையது.

பயன்கள்

  • இதன் இலைச்சாற்றை நல்லெண்ணையில் கலந்து காய்ச்சி வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து குளித்து வர ஆஸ்துமா, கண் எரிச்சல், உடம்பு எரிச்சல் ஆகியவை தீரும்.
  • முசுமுசுக்கை இலைப்பொடி 100 கிராம், தூதுவேளை சூரணம் 75 கிராம் கலந்து அதனுடன் கருவேலம்பிசின் 1 அரிசி எடையளவு வெண்ணையில் கலந்து ஒரு மண்டலம் 48 நாட்கள் சாப்பிட்டுவர என்புருக்கி, இரைப்பிருமல் ( ஆஸ்துமா), இரத்தகாசம், கபம் ஆகியவை தீரும். ஒரு மண்டலத்தில் சரியாகவில்லை எனில் தொடர்ந்து மேலும் ஒரு மண்டலம் சாப்பிட குணமாகும்.
  • முசுமுசுக்கை வேர் 100 கிராம், ஆடாதோடை வேர் 75 கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவை வகைக்கு 10 கிராம், லவங்கம் 2 கிராம் சேர்த்து இடித்து பொடி செய்து 5 அரிசி எடை கறுப்பு வெற்றிலையுடன் உட்க்கொண்டு பால் அருந்தி வர சுவாச உறுப்பை சுத்தமாக்கும். உறைந்த சளி வெளியாகும். நாட்பட்ட இருமல் என்புருக்கி தீரும்.
  • முசுமுசுக்கை இலையை 2 கைப்பிடி அளவு எடுத்து துவையல் செய்து சாப்பிட்டு வர காய்ச்சல், சளி சுரம், ருசியின்மை, இரத்தகாசம், இரைப்பிருமல் (ஆஸ்துமா), நீர்க்கோவை, மூக்குப்புண், வாசனையின்மை ஆகியவை தீரும்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =

Back to top button
error: Content is protected !!