அழகு

முக வசீகரத்திற்கு எளிய வழிமுறைகள்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது நம் முன்னோர்கள் சொல். உடல் ஆரோக்கியத்தை காட்டும் கண்ணாடியாகவும் இருக்கிறது முகம். உடலின் அழகியல் உறுப்புகளில் முகத்திற்க்கே முதலிடம். நம் முகத்தை வசீகரமாக இருக்க சில இயற்கையான வழிமுறைகளை பார்ப்போம்.

அறுகம்புல்

கணு நீக்கிய அறுகம்புல் 20 கிராம் நன்கு அரைத்து சமஅளவு வெண்ணெய் கலந்து 20 முதல் 40 நாள்கள் வரை சாப்பிட அறிவு மிகுந்து முக வசீகரம் உண்டாகும்.

தூதுவேளை

நாள்தோறும் 10 தூதுவேளைப்பூவை நீர்விட்டு காய்ச்சிப் பால், சர்க்கரைக் கலந்து 1 மண்டலம் ( 45 நாள்கள் ) பருக முக வசீகரமும் அழகும் பெறலாம்.

இஞ்சி

200 இஞ்சி தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி 200 தேனில் போட்டு 4 நாள்கள் கழித்து ஓரிரு துண்டுகள் வெறும் வயிற்றில் 1 மண்டலம் சாப்பிட முகப்பொலிவும், அழகும் உண்டாகும்.

நாயுருவி

நாயுருவி வேரால் பல் துளக்கப் பல் தூய்மையாகி முகவசீகரம் உண்டாகும்.

மூக்கிரட்டை

மூக்கிரட்டையிலையைத் தொடர்ந்து பயன்படுத்தி வர முகப்பொலிவும் வசீகரமும் உண்டாகும்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!