மூலிகைகள்

பழம்பாசி மருத்துவ பயன்கள்

பழம்பாசி தமிழகமெங்கும் தானே வளருகிறது. இதயவடிவான இலைகளை கொண்டது. இதன் இலை பசிய இலையையுடைய சிறு செடி. பழம்பாசி இலைகளே மருத்துவ பயனுடையது. சதை நரம்புகளை சுருங்க செய்தல், வெப்பம் போக்குதல் ஆகிய குணமுடையது.

மஞ்சட்கா மாலையொடு மாந்தங் கணச்சூடும்
விஞ்சுகட்டி சோகைக்கணம் மேதினியில் – அஞ்சிடவே
குத்தலுறு மூலங் குதநெகிழ்ச்சி சீதமும்போம்
நத்துபழம் பாசிகுணம் நாடு

குணம்

பழம்பாசியினால் காமாலை, மாந்தம், கணச்சூடு, கட்டி, சோகை, ஊதுகணம், மூலம், சீதபேதி முதலியவை நீங்கும் என்க.

பயன்கள்

  • இலையுடன் சிறிது பச்சரிசி சேர்த்து அரைத்து களி போல் கிளறி கட்டிகளுக்கு வைத்து கட்ட பழுது உடையும்.
  • 50 கிராம் அளவு இலையை சிறிது சிறிதாக அரை லிட்டர் பாலில் போட்டு வேகவைத்து வடிகட்டி சிறிது எலுமிச்சை சாறு கலந்து தினமும் 3 வேளை சாப்பிட மூலச்சூடு தணியும். இதை 20 மி.லி அளவாக குழந்தைகளுக்கு காலை, மாலை கொடுக்க இரத்தக்கழிச்சல், சீதக்கழிச்சல் ஆகியவை தீரும்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + two =

Back to top button
error: Content is protected !!