மூலிகைகள்

தீரா காய்ச்சலை குணமாக்கும் சிறுகுறிஞ்சா

எதிர் அடுக்கில் அமைந்த இலைகளையும் இலைக் கோணத்தில் அமைந்த பூங்கொத்துகளையும் உடைய சுற்றுக் கொடிமுதிர்ந்த காய்களிலிருந்து பஞ்சு பொருந்திய காற்றில் பறக்கக் கூடிய விதைகளை உடையது. இலை, வேர் ஆகியவைமருத்துவப் பயனுடையது.

மருத்துவ பயன்கள்

இலை பித்தம் பெருக்கும், தும்மலுண்டாக்கும், வாந்தியுண்டாக்கும், நஞ்சு முறிக்கும். வேர் காய்ச்சல், போக்கும், நஞ்சுமுறிக்கும், சதை நரம்பு ஆகியவை சுருங்கச் செய்யும்.

கொடி இலையுடன் (50 கிராம்) திரிகடுகு வகைக்கு 10 கிராம் சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மி.லி யாகச்காய்ச்சி வடித்து 10 நிமிடத்திற்கு ஒரு முறை 10 மி.லி வீதம் கொடுத்து வர ஒரே நாளில் தணியாத தாகத்துடன் உள்ள சுரம் தணியும்.

கொடி இலையுடன் 10 கிராம் களா இலை 20 கிராம் மையாய் அரைத்துக் காலையில் வெறும் வயிற்றில் கொடுத்து வரத் தாமதித்து வரும் மாதவிடாய், உதிரச்சிக்கல், கற்பாயசக் கோளாறு தீரும்.

இலை ஒரு பங்கும் 2 பங்கு தென்னம்பூவும் மையாய் அரைத்து பட்டாணி அளவாய் மாத்திரை செய்து நிழலில் உலர்த்திகாலை, மாலை 1 மாத்திரை வெந்நீரில் விழுங்க சிறு நீர்ச் சர்க்கரை தீரும். மருந்து சாப்பிடும் வரை நோய் விலகி இருக்கும்.

சிறுகுறிஞ்சா வேர்ச் சூரணம் 1 சிட்டிகை, திரிகடுகு சூரணம் 1 சிட்டிகை வெந்நீரில் குடித்து வர கபம் வெளியாகி ஆஸ்துமா, மூச்சுத்திணறல் தீரும்.

நன்கு நசுக்கிய சிறுகுறிஞ்சா வேர் 40 கிராம் ஒரு லிட்டர் நீரில் போட்டு 100 மி.லி.யாகக் காய்ச்சி வடித்து 30 மி.லி யாகக் காலை, மதியம், மாலை கொடுத்து வரக் காய்ச்சல், இருமல், காசம் ஆகியவை தீரும்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =

Back to top button
error: Content is protected !!