உடல் நலம்

காய்ச்சல் குணமாக, வராமல் தடுக்க

காய்ச்சல் அதிகமாக பரவுவது கொசுக்களின் மூலம் தான். இப்பொழுது வரும் காய்ச்சலுக்கு பன்றி காய்ச்சல், டெங்கு, மலேரியா, பறவை காய்ச்சல், மர்மக்காய்ச்சல், விசகாய்ச்சல் என பல வகைகள் உள்ளது. இக்காய்ச்சல் ஏற்படும் போது தசை மூட்டு வலிகள் அதிகமாக இருக்கும். உடல் சோர்வுடன் காணப்படும். கொசுக்கடியால் பரவும் அனைத்து வகையாக காய்ச்சலுக்கும் சித்த மருத்துவத்தில் ஒரே மருத்துவ முறைதான்.

சித்த மருத்துவ முறைகள்

  • நிலவேம்பு, சுக்கு, திப்பிலி, சீந்தில் கொடி வகைக்கு 10 கிராம் சிதைத்து அரை லிட்டர் நீரிலிட்டு 200 மி.லி யாகக் காய்ச்சி 30 மி.லி வீதம் கொடுத்து வரக் குழந்தைகளுக்கு காணும் அனைத்து காய்ச்சலும் தீரும். நிலவேம்புச் செடிக்கு நோய் எதிர்ப்பு சக்தியும், டைபாய்டு எதிர்ப்பு சக்தியும் உள்ளது.
  • நிலவேம்புடன் சிறிதளவு பப்பாளி இலையையும் சேர்த்து கசாயம் வைத்து குடிக்கலாம்.
  • விஷ்ணு கிராந்தி இலையுடன் துளசி, ஆடாதோடை, தும்பை, வெள்ளறுகு, சம அளவு சேர்த்து புட்டு போல் அவித்து எடுத்து சாறு பிழிந்து 15 மில்லி அளவு காலை மாலை இரு வேளை சாப்பிட நீண்ட நாள் காய்ச்சல் விஷக் காய்ச்சல் குணமாகும்.
  • வாயிலிட்டு சிறிது நேரம் வைத்திருக்க விசக்காய்ச்சல் வராமல் தடுக்கும்.
  • பற்பாடகம், நிலவேம்பு, சுக்கு, சீரகம், அதிமதுரம் வகைக்கு 10 கிராம் 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி தினம் 6 வேளை 50 மி லி கொடுக்க நச்சுக்காய்ச்சல் குணமாகும், காய்ச்சல் வராமலும் தடுக்கும்.
  • நன்கு நசுக்கிய சிறுகுறிஞ்சா வேர் 40 கிராம் ஒரு லிட்டர் நீரில் போட்டு 100 மி.லி.யாகக் காய்ச்சி வடித்து 30 மி.லி யாகக் காலை, மதியம், மாலை கொடுத்து வரக் காய்ச்சல், இருமல், காசம் ஆகியவை தீரும்.
  • தான்றிக்காய் கொட்டை நீக்கிக் கருகாமல் வறுத்துத் பொடித்து 1 கிராம் அளவு சர்க்கரை கலந்து காலை, மாலை கொடுக்க மலச்சிக்கல், குடல் பலமின்மை, காய்ச்சல், பித்தத் தலைவலி, இரத்தமூலம், சீதபேதி ஆகியவை தீரும்.
  • ஓமவல்லி இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல்,சளிக்காய்ச்சல் குணமாகும்.
  • அகத்தி மரத்தின் பட்டையை இடித்து தண்ணீரில் கலந்து காய்ச்சி குடிக்க விஷக் காய்ச்சல் போய்விடும்.
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − one =

Back to top button
error: Content is protected !!