மூலிகைகள்

கருப்பை பலம் பெற… சதகுப்பை

சதகுப்பை கீரைவகையை சேர்ந்தது. இதன் விதைகளே சதகுப்பை எனப்படும். இது சீரகம், சோம்பு போன்று சமையலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதன் கீரைக்கு சோகிக்கீரை என்று பெயர்.

வாதமோடு சூதிகா வாதஞ் சிரசுநோய்
மோதுசெவி நோய்கபநோய் மூடுசுர – மோதுகின்
மூலக் கடுப்பு முதிர்பீந சம்போக்கு
ஞாலச் சதகுப்பை நாடு

குணம்

சதகுப்பை வாதரோகம், அசிர்க்கரம், தலை வலி, கர்ணசூலை, சலதோசம், கபரூட்சை, ஆசன கடுப்பு, சல பிநசம் ஆகிய இவைகள் நீங்கும் என்க.

பயன்கள்

  • சதகுப்பை, கருஞ்சீரகம், மர மஞ்சள், இவற்றை சமனெடையாக பொடித்து சமன் பனைவெல்லம் சேர்த்தரைத்து 5 கிராம் காலை, மாலை சாப்பிட்டு 5 நிமிடம் கழித்து சோம்பு குடிநீர் கொடுத்து வர உதிர்ச்சிக்கல் நீங்கி கருப்பை பலப்படும். கர்ப்பம் தரிக்கச்செய்யும்.
  • சதகுப்பை சூரணம் ஒரு கிராம் அளவு எடுத்து சர்க்கரை கலந்து சாப்பிட்டு வர பிசியின்மை போக்கும். வாத நோயை கட்டு படுத்தும். இரைப்பை, நுரையீரல் ஆகியவற்றில் உள்ள மாசுக்களை அகற்றும்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + seven =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!