மூலிகைகள்

இலந்தை மருத்துவ பயன்கள்

வளைந்த கூர்மையான முட்களுடன் முட்டை வடிவ இலைகளும் உடைய சிறு மரம். தமிழகத்தின் வறட்சி பகுதிகளில் தானாகவே வளர்கிறது. புளிப்புச் சுவையுடைய உண்ணக் கூடிய பழங்களை உடையது. இலை, பட்டை, வேர்ப்பட்டை, பழம் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

இலை, தசை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும், வேர், பட்டை பசித் தூண்டியாகவும் பழம் சளி நீக்க, மலமிளக்கி, பசித்தீயை மிகுக்கக் கூடியதாகவும் பயன்படுகிறது.

பித்த மயக்கருசி பேராப் பெருவாந்தி
மொத்தனிலா மெல்லா முடிந்திடுங்காண் – மெத்த
வுலர்ந்த வெறுவயிற்றி லுண்டா லெரிவா
மிலந்தை நறுங்கனியை யெண்

குணம்

இலந்தை பழத்தால் பித்தமூர்ச்சை, அரோசகம், வலிவாதம் இவைகள் போகும் என்க.

மருத்துவ பயன்கள்

இலந்தை பழத்தை நன்கு பிசைந்து அதனுடன் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து வடை போல் தட்டி காயவைத்து சாப்பிட்டு வந்தால், வாந்தி, அக்கினி மந்தம், கபக்கட்டு முதலியவைகள் நீங்கி நல்ல பசி உண்டாகும்.

இலை 1 பிடி, மிளகு 6, பூண்டுப் பல் 4 அரைத்து மாதவிலக்கான முதல் 5 நாள்கள் கொடுத்து வரக் கருப்பை குற்றங்கள் நீங்கிப் புத்திர பாக்கியம் கிட்டும்.

இலந்தைப் பட்டை 40 கிராம், மாதுளம் பட்டை 40 கிராம் சிதைத்து, அரை லிட்டர் நீரில் போட்டுத் கொதிக்க வைத்து 125 மி லி யாக்கி 4 வேளை தினமும் குடித்து வர நாள்பட்ட பெரும்பாடு குணமாகும்.

இலந்தை வேர்ப்பட்டை சூரணம் 4 சிட்டிகை இரவில் வெந்நீரில் சாப்பிட பசியின்மை நீங்கும்.

துளிர் இலையையாவது பட்டையாவது 5 கிராம் நெகிழ அரைத்து தயிரில் காலை மாலையாகக் கொடுக்க வயிற்றுக் கடுப்பு, இரத்தப் பேதி குணமாகும்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!